சப்ரகமுவ மாகாணத்தில் வருமான வரிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

சப்ரகமுவ மாகாணத்தில் வருமான வரிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

கொவிட் தொற்று காரணமாக சப்ரகமுவ மாகாணத்தில் பதிவுபெற்றுள்ள வாகனங்களுக்கான வருமான வரிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகளை இன்று(01) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, காலாவதியாகும் அனுமதிப்பத்திரங்களுக்காக, ஜுலை 31 ஆம் திகதிவரை எவ்வித அபராதமும் அறிவிடப்படமாட்டாது என சப்ரகமுவ மாகாண சபையின் பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.