நாட்டில் 925,242 பேருக்கு அஸ்ட்ரா செனகா தடுப்பூசியும் 514,259 பேருக்கு சினோபாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது

நாட்டில் 925,242 பேருக்கு அஸ்ட்ரா செனகா தடுப்பூசியும் 514,259 பேருக்கு சினோபாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது

நாட்டில் நேற்றைய 5,192 பேருக்கு அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாம் மாத்திரை செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதுவரையில் 925,242 பேருக்கு அஸ்ட்ரா செனகா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதோடு அவர்களில் 330,988 பேருக்கு இரண்டாம் மாத்திரை செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 514,259 பேருக்கு சினோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதோடு அவர்களில் 2,435 பேர் இரண்டாம் மாத்திரையை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து வகை கொவிட் தடுப்பூசிகளும், கொவிட் மரணம் ஏற்படுவதிலிருந்து உயர்ந்தளவு பாதுகாப்பை அளிப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

உலக நாடுகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள 8 கொவிட் தடுப்பூசிகளின் சாத்தியக்கூறுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதையடுத்த இந்த முடிவு தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அனைத்து வகையான கொரோனா திரிபுகளுக்கு எதிராகவும், பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியே உச்ச அளவில் வினைத்திறனாக செயற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்கமைய பைசர், மொடர்னா, ஜோன்சன் என்ட் ஜோன்சன், அஸ்ட்ராசெனகா, ஸ்புட்னிக், நொவாவெக்ஸ், சினொவெக் மற்றும் சினோபாம் ஆகிய தடுப்பூசிகள் கொவிட்-19 மரணம் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிப்பதாக கண்டறிப்பட்டுள்ளது.