அனர்த்த நிலைமைக்கு முகங்கொடுக்க விமானப் படை தயார்நிலையில்

அனர்த்த நிலைமைக்கு முகங்கொடுக்க விமானப் படை தயார்நிலையில்

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்பதற்கு தயார்நிலையில் உள்ளதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, சீரற்ற காலநிலையினால் ஏற்படும் அனர்த்தங்களால் பாதிக்கப்படுபவர்களை மீட்பதற்கும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் 9 உலங்குவானூர்திகளை தயார்நிலையில் வைத்துள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.