நானுஓயா -சமர்செட் தோட்ட நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்: 8 வீடுகள் சேதம்

நானுஓயா -சமர்செட் தோட்ட நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்: 8 வீடுகள் சேதம்

நானுஓயா காவல்துறை பிரிவுக்குட்பட்ட சமர்செட் தோட்ட தொகுதியில் இன்று முற்பகல் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 8 வீடுகள் சேதமாகியுள்ளன.

அத்துடன் குறித்த வீடுகளில் உள்ள 42 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நானுஓயா காவல்துறையினர் தெரிவித்தனர்.

தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

இந்தநிலையில் பிரதேச மக்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.