27 ஆம் திகதிய நிலைமையை கருத்திற்கொண்டே வாரஇறுதி நடமாட்டக்கட்டுப்பாடு குறித்து தீர்மானம்!

27 ஆம் திகதிய நிலைமையை கருத்திற்கொண்டே வாரஇறுதி நடமாட்டக்கட்டுப்பாடு குறித்து தீர்மானம்!

எதிர்வரும் செவ்வாய்கிழமை (25) இரவு 11 மணிமுதல் மீண்டும் அமுலாகும் நடமாட்டக்கட்டுப்பாடு வெள்ளிகிழமை (28) அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் அரசாங்கம்  அறிவித்துள்ளது. 

எனினும், வாரஇறுதிகளில் மீண்டும் நடமாட்டக்கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் எவ்வித அறிவிப்பும் தற்போதுவரை விடுக்கப்படவில்லை. 

எனினும், 27 ஆம் திகதியன்று நாட்டின் நிலைமை தொடர்பில் ஆலோசித்து, எதிர்வரும் 29 மற்றும்30 ஆம் திகதிகளில் நடமாட்டக் கட்டுப்பாடு விதிப்பதா? இல்லையா? என தீர்மானிக்கப்படும் என கொவிட் பரவலை கட்டுப்படுத்து தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.