35,873 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 448 பேர் உயிரிழப்பு

35,873 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 448 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை வேகம் எடுத்துள்ள நிலையில், அதை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்தநிலையில்,  தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் ஒரே நாளில் 35,873 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று 36,184 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 35,873 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

சென்னையில் ஏற்கனவே 5,913 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 5,559 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 5,559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் மேலும் 448 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,046 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையில் மட்டும் மேலும் 86 பேர் உயிரிழந்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 100 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 125 பேர் உயிரிழந்தனர்.  அரசு மருத்துவமனைகளில் 279 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 169 பேரும் உயிரிழந்தனர்.

கொரோனாவில் இருந்து மேலும் 25,776 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 15,02,537 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2,84,276 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.