சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது!

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது!

கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளைய தினம் வெளியிடப்படவுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானதென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

அத்துடன் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுவதற்கு முன்னர் அது தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.