கொவிட் மரணங்களில் வழமைக்கு மாறான அதிகரிப்பு!

கொவிட் மரணங்களில் வழமைக்கு மாறான அதிகரிப்பு!

நாட்டில் மேலும் 38 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 1,089 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த மே 7 ஆம் திகதியிலிருந்து மே 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.