நாகொட வைத்தியசாலையிலிருந்து கொவிட் தொற்றாளர்கள் இருவர் தப்பியோட்டம்
களுத்துறை - நாகொட வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை மையத்திலிருந்து இரண்டு பேர் தப்பிச் சென்றுள்ளனர்.
வைத்தியசாலையின் மதில் மீதேறி அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
அதில் பெண் ஒருவரும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொவிட் 19 தொற்றுறுதியாகி வீடுகளில் இருந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய முதற்கட்ட செயற்பாடுகள் தொடர்பிலான ஆலோசனைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
விசேட குழுவொன்றினால் இந்த ஆலோசனை அடங்கிய அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.