லக்ஷபானவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொவிட்
அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட லக்ஷபான - மொரஹேனகம பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொற்றாளர்களுள் 2 மற்றும் 5 வயதுகளையுடைய குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுயதனிமைப்படுத்துலுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் போதே இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.