இன்றும் 3051 பேருக்கு கொரோனா!

இன்றும் 3051 பேருக்கு கொரோனா!

நாட்டில் முதல் முறையாக நாளொன்றில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3000ஐக் கடந்துள்ளது.

இன்று இதுவரையான காலப்பகுதியில், 3051 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில், ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 151,162ஆக உயர்வடைந்துள்ளது.