தேயிலை மலையில் தொழிலாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தேயிலை மலையில் தொழிலாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

வெலிஓயா மேல் பிரிவில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (18) காலை 09 மணி அளவில் தேயிலை செடியினுள் இருந்த குளவி கூடு கலைந்து கொட்டியுள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்காகிய 06 பெண் தொழிலாளர்களும் வட்டவளை வைத்தியசாலையில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.