நாடு முழுவதும் இன்று முதல் சோதனை நடவடிக்கைகள்

நாடு முழுவதும் இன்று முதல் சோதனை நடவடிக்கைகள்

ஐஸ் , ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கண்டறிவதற்காக நாடு முழுவதும்  இன்று (17) முதல் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட புதிய இரண்டு இயந்திரங்களை பயன்படுத்தி இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.