தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள செய்தி..!

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள செய்தி..!

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியிடப்படும் சில தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையாகும்போது, சுமார் ஆறு மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிட்டு நிறைவுசெய்ய முடியும் என அரசாங்க அச்சகமாதிபர் தம்மிடம் கூறியதாக தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குச் சீட்டை அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்படவில்லை.

6 இயந்திரங்களில் 5 இயநந்திரங்களின் மூலம் வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஒரு இயந்திரத்தில் அச்சிடும் பணிகளின்போது, மாவட்டமொன்றின் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் எண்ணிக்கை குறித்த முரண்நிலையினால், அதனை பரிசீலனைக்கு உட்படுத்துவதற்காக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எனினும், அதிலும் அச்சிடுவதற்கு தற்போது தயார்ப்படுத்தப்படுகின்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் தெரிவித்தார்.

அரசாங்க அச்சகமா அதிபர் குறிப்பிடுவதற்கு அமைய, நாளைய தினம் நிறைவடையும்போது, அல்லது ஞாயிற்றுக்கிழமை முற்பகல் அளவில் குறைந்தது ஆறு மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் நிறைவடையும்.

வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் எந்த விதத்திலும் இடைநிறுத்தப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.