கொவிட் தொற்றினால் மற்றுமொரு கர்ப்பிணிப் பெண்ணும் உயிரிழப்பு (காணொளி)

கொவிட் தொற்றினால் மற்றுமொரு கர்ப்பிணிப் பெண்ணும் உயிரிழப்பு (காணொளி)

கொவிட்-19 தொற்றினால் மற்றுமொரு கர்ப்பிணிப் பெண்ணும் உயிரிழந்தார்.

இதையடுத்து, கொவிட்-19 தொற்றினால் மரணித்த கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

திஸ்ஸமஹாராம - யாயகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய கர்ப்பிணிப் பெண் கொவிட் தொற்றால், மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் நேற்று (15) உயிரிழந்தார்.

அத்துடன், அவரின் கருவில் இருந்த 8 மாத சிசுவும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.