வாடிக்கையாளர்களுக்கு கொவிட்-19 தொற்று: இங்கிலாந்தில் பல பப்கள் மூடப்பட்டன!

வாடிக்கையாளர்களுக்கு கொவிட்-19 தொற்று: இங்கிலாந்தில் பல பப்கள் மூடப்பட்டன!

வாடிக்கையாளர்கள் சிலர் கொரோனா வைரஸுக்கு நேர்மறையானதை பரிசோதித்த பின்னர், இங்கிலாந்தில் பல பப்கள் மூடப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பப்கள் சமூகவலைதளமான முகப்புத்தகம் வழியாக மூடப்படுவதனை அறிவித்தன. வார இறுதியில் மீண்டும் திறக்கப்பட்ட குறைந்தது மூன்று நிறுவனங்கள், மீண்டும் பப்களை மூடியதாக அறிவித்தன.

மூன்று பப்களும் முன்னர் அரசாங்க ஆலோசனைக்கு ஏற்ப புதிய சமூக தூர மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை செயற்படுத்துவது குறித்து பதிவிட்டிருந்தன.

மேலும், ஊழியர்கள் சோதனைகளை மேற்கொண்டதாகவும், மீண்டும் திறப்பதற்கு முன்னர் குறித்த இடம் ஆழமாக சுத்தம் செய்யப்படும் என்றும் பப் கூறியுள்ளது.

மேற்கு யோர்க்ஷயரின் (West Yorkshire) பேட்லியில் (Batley), ஃபாக்ஸ் அண்ட் ஹவுண்ட்ஸ் (Fox and Hounds) ஒரு வாடிக்கையாளர் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்த பின்னர், தொலைப்பேசியில் இதுகுறித்து அறிவித்தாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஹாம்ப்ஷயரின் (Hampshire) ஆல்வர்ஸ்டோக்கில் உள்ள வில்லேஜ் ஹோம் பப், கொவிட்-19 தொற்று காரணமாக சில ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படுவதாகக் கூறியுள்ளது.

ஆனால், வார இறுதியில் வருகைதந்த வாடிக்கையாளர்களுக்கு அறிகுறிகள் இல்லாவிட்டால் தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் கூறியது.