சீரற்ற காலநிலையால் 11, 542 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலையால் 11, 542 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 2750 குடும்பங்களை சேர்ந்த 11,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அத்துடன்,சீரற்ற காலநிலையால் 205 வீடுகள்பாதிக்கப்பட்டுள்ளதோடு ,42 குடும்பங்களை சேர்ந்த 175 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.