வடமேல் மாகாணத்தில் வாகன வருமான வரி பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

வடமேல் மாகாணத்தில் வாகன வருமான வரி பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

வடமேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான வரி சான்று வழங்கல் செயற்பாடு எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி வரை இடை நிறுத்தப்படவுள்ளது.

அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள காலப்பகுதியினுள் காலாவதியாகும் வாகன வருமான வரிப் பத்திரங்களை மீள புதுப்பிக்கும் போது எவ்வித அபராதங்களும் அறவிடப்படமாட்டாது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.