காலி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

காலி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நியகம, எல்பிட்டிய, நாகொட, நெலுவ, பத்தேகம மற்றும் தவலம ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.