எதிர்வரும் மூன்று நாட்களில் பதிவு திருமணம் செய்ய அனுமதி!

எதிர்வரும் மூன்று நாட்களில் பதிவு திருமணம் செய்ய அனுமதி!

எதிர்வரும் 14,15,16 ஆகிய திகதிகளில் பதிவு திருமணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுமென காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தமது சொந்த வீடுகளில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோரை மாத்திரம் கொண்டு (ஆகக்கூடியது 15 பேர்) திருமண பதிவு நிகழ்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், திருமண விருந்துபசாரங்களையோ, களியாட்டங்களையோ நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.