சுகாதார பிரிவினர் விடுத்துள்ள எச்சரிக்கை
எதிர்வரும் தினங்களில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது அதிகளவில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருதாக தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட வைரஸ் வகையே பரவி வருவதாகவும் குறித்த வைரஸ் மிக வேகமாகமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வௌிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் ஊடாகவே இந்த வைரஸ் இலங்கைக்கு வந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் வௌிநாட்டில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கையை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.