மாகாணங்களுக்குள் மாத்திரம் தொடருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை!

மாகாணங்களுக்குள் மாத்திரம் தொடருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை!

மாகாணங்களுக்குள் மாத்திரம் தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் நாளை(12) முதல் இவ்வாறு தொடருந்து சேவைகள் இயக்கப்படலாம் என அந்த திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

தொடருந்து சேவைகள் இயக்கப்படவுள்ள முறை தொடர்பில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.