இலங்கையை பசுமை சமூக பொருளாதாரமாக்குவதற்கு ஜனாதிபதி செயலணி நியமிப்பு!

இலங்கையை பசுமை சமூக பொருளாதாரமாக்குவதற்கு ஜனாதிபதி செயலணி நியமிப்பு!

காலநிலை மாற்றத்திற்கு நிலையான தீர்வை வழங்கி இலங்கையை பசுமை சமூக பொருளாதாரமாக்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பெசில் ராஜபக்‌ஷ தலைமையில் இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

குறித்த செயலணியில் 5 அமைச்சர்கள், ஆளுநர் ஒருவர், 12 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அடங்களாக 46 பேர் அங்கம் வகிக்கின்றனர்.