5 மாவட்டங்களின் 14 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

5 மாவட்டங்களின் 14 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

கம்பஹா, அம்பாறை, குருநாகல், திருகோணமலை மற்றும் களுத்துறை முதலான 5 மாவட்டங்களின் 14 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில், திவுலப்பிட்டி காவல்துறை அதிகார பிரிவில் அஸ்வென்னவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவும், கொட்டதெனியாவ காவல்துறை அதிகார பிரிவில், ஹீரலு கெதர முதலான கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில், தெய்யத்தகண்டி காவல்துறை அதிகார பிரிவில் கதிராபுரம் கிராம சேவகர் பிரிவு, தெய்யத்தகண்டி கிராம சேவகர் பிரிவு சந்தன பகுதி, தெய்யத்தகண்டி கிராம சேவகர் பிரிவு தொலகந்த பிரிவு என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

குருநாகல் மாவட்டத்தில், குமுபுகடே காவல்துறை அதிகார பிரிவில், தித்தவெல்கல மற்றும் நீராவிய முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில், உப்புவெளி காவல்துறை அதிகார பிரிவில் அன்புவழிபுரம் கிராம சேவகர் பிரிவும், திருகோணமலை காவல்துறை அதிகார பிரிவில், உவர்மலை, மட்கோ, லிங்கநகர் முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், சீனக்குடா காவல்துறை அதிகார பிரிவில், சீனக்குடா கிராம சேவகர் பிரிவு லங்காபாலம் மற்றும் தன்யாகம-01, காவட்டிகுடா கிராம சேவகர் பிரிவு சமன்புர, மீன்பிடி கிராமம் மற்றும் தன்யாகம-02 முதலான பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில், பாணந்துறை தெற்கு காவல்துறை அதிகார பிரிவில் நாரம்பிட்டி கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.