
குருதி கொடையாளிகளுக்கு முக்கிய அறிவித்தல்!
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொது மக்களை குருதி வழங்க முன்வருமாறு வைத்தியசாலையின் பணிப்பாளர் செந்தூர் பதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
வைத்தியசாலையின் இரத்த வங்கியில் தற்போது நிலவும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் முகமாக மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
எனவே குருதி வழங்க விரும்புபவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் அல்லது 023 22 22 261 மற்றும் 023 222 23 49 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி குருதி வழங்கி வைக்க முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.