இந்தியாவின் முதல் தபால் தலை வெளியிடப்பட்ட நாள்: மே 6 -1854

இந்தியாவின் முதல் தபால் தலை வெளியிடப்பட்ட நாள்: மே 6 -1854

இந்தியாவின் முதல் தபால் தலை 1854-ம் ஆண்டு மே 6-ந்தேதி வெளியிடப்பட்டது. இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1840 - பென்னி பிளாக் அஞ்சற்தலை ஐக்கிய இராச்சியத்தில் (அயர்லாந்து உட்பட) பயன்படுத்த அநுமதிக்கப்பட்டது. * 1854 - இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது. * 1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் 34-வது ராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக கலைக்கப்பட்டது. இப்பிரிவின் மங்கள் பாண்டே என்ற

 

இந்தியாவின் முதல் தபால் தலை 1854-ம் ஆண்டு மே 6-ந்தேதி வெளியிடப்பட்டது.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1840 - பென்னி பிளாக் அஞ்சற்தலை ஐக்கிய இராச்சியத்தில் (அயர்லாந்து உட்பட) பயன்படுத்த அநுமதிக்கப்பட்டது. * 1854 - இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது. * 1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் 34-வது ராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக கலைக்கப்பட்டது. இப்பிரிவின் மங்கள் பாண்டே என்ற சிப்பாய் தனது மேலதிகாரிகளுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஏப்ரல் 8-ல் தூக்கிலிடப்பட்டான். * 1860 - கரிபால்டி தனது தொண்டர் படைகளுடன் இரண்டு சிசிலிகளின் பேரரசைக் கைப்பற்றுவதற்காக ஜெனோவாவில் இருந்து புறப்பட்டான்.

* 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சஸ் அமெரிக்கக் கூட்டணியில் இருந்து விலகியது. * 1889 - ஈபிள் டவர் பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்துவிடப்பட்டது. * 1910 - ஐந்தாம் ஜார்ஜ் ஐக்கிய ராச்சியத்தின் மன்னனாக முடி சூடினான். * 1930 - ஈரானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 4,000 பேர் கொல்லப்பட்டனர். * 1937 - ஜெர்மனியின் ஹின்டென்பேர்க் என்ற வான்கப்பல் (zeppelin) நியூ ஜெர்சியில் தீப்பிடித்து அழிந்தது. * 1942 - இரண்டாம் உலகப் போர்: பிலிப்பைன்சில் நிலை கொண்டிருந்த கடைசி அமெரிக்கப் படைகள் ஜப்பானிடம் சரணடைந்தனர். * 1945 - இரண்டாம் உலகப் போர்: கிழக்கு ஐரோப்பாவின் கடைசிப் பெரும் சமர் பிராக் நகரில் ஆரம்பமானது.

* 1967 - ஜாகிர் உசேன் இந்தியாவின் முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவரானார். * 1976 - இத்தாலியின் ஃபிறியூல் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 989 பேர் கொல்லப்பட்டனர். * 1994 - ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் இணைக்கும் கால்வாய் சுரங்கம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. * 2001 - சிரியாவுக்கான தனது பயணத்தில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் மசூதி ஒன்றிற்கு சென்றார். மசூதிக்குச்சென்ற முதலாவது திருத்தந்தை இவரேயாவார்.