திருமலையில் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

திருமலையில் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி  இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, உப்புவெளி காவல்துறை அதிகார பிரிவில் சுமேதகம்புர, திருகோணமலை காவல்துறை அதிகார பிரிவில் மூதோவில், கோவிலடி, லிங்கநகர் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் சீனக்குடா காவல்துறை அதிகார பிரிவின் சீனக்குடா மற்றும் காவட்டிக்குடா ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன