மியன்மாரில் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 12 பேரும் நாடு திரும்பினர்

மியன்மாரில் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 12 பேரும் நாடு திரும்பினர்

மியன்மாரில் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 12 பேரும் நேற்று (23) நாடு திரும்பியுள்ளனர்.

சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான SQ468 விமானத்தின் மூலம் அவர்கள் இலங்கைக்கு வந்தடைந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த மீனவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது