
ஆலயச்சூழலில் அசிங்கம் செய்த விசமிகள்! கொதிப்படைந்த மக்கள்
வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தை அண்டிய பகுதியில் உயிரிழந்த கோழிக்குஞ்சுகளை வீசிச்சென்றுள்ளமையால் சுகாதாரசீர்கேடான நிலமை உருவாகியுள்ளது.
குறித்தபகுதியில் உள்ள ஆலயத்திற்கு முன்பாகவுள்ள பள்ளத்தில் விசமிகள் சிலர் உயிரிழந்த நிலையில் காணப்படும் நூற்றுக்கணக்கான கோழிக்குஞ்சுகளை இன்று மாலை வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
இதனால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசிவருவதுடன், சுகாதார சீர்கேடான நிலமை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு அருகில் சிறுவர் பூங்காமற்றும் ஆலயம் அமைந்திருப்பதனால் அதிகமான பொதுமக்கள் சென்றுவரும் இடமாக அது காணப்படுகின்றது.
இந்நிலையில் இவ்வாறான நாசகார செயலை செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.