பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டி அடுத்த வாரம் (காணொளி)

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டி அடுத்த வாரம் (காணொளி)

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டிகளை அடுத்த வாரத்திற்குள் வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அது குறித்து நாளைய தினம் அனைத்து துணை வேந்தர்களுடன் கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

அதேநேரம் அனைத்து பல்கலைக்கழங்களையும் மீள ஆரம்பிக்கும் வகையில் குழுக்களாக மாணவர்களை அழைப்பதற்கு தேவையான அனுமதி ஏலவே உப வேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்