தீ விபத்தில் ஒருவர் பலி!

தீ விபத்தில் ஒருவர் பலி!

மாத்தளை- தலுபோதகம பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்குண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீப்பரவலை பிரதேசவாசிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்