நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பில் பதிவு

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பில் பதிவு

நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கொவிட் 19 ஐ கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் நேற்றைய தினம் 57 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது.

அதேநேரம், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 49 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 33 பேரும், திருகோணமலையில் 20 பேரும், யாழ்ப்பாணத்தில் 15 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 14 பேரும் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கம்பஹாவில் 22 பேருக்கும், களுத்துறையில் 11 பேருக்கும், கண்டியில் 7 பேருக்கும், மாத்தறையில் 10 பேருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியானதாக கொவிட் 19 ஐ கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது