2.4 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2.4 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

வத்தளை, ஜா-எல மற்றும் சப்புகஸ்கந்தை ஆகிய பகுதிகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வந்த போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை - ஹுணுபிட்டிய பகுதியில் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகளால் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 2.4 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்