நாட்டின் பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை
வடக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின், வானிலை நிலவர அறிக்கையில், இந்த விடயம் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மழையுடனான வானிலையுடன், அதிக மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது