தொடருந்து பணியாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது!

தொடருந்து பணியாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது!

தொடருந்து இயந்திர சாரதிகளும், தொடருந்து கட்டுப்பாட்டாளர்களாளும் ஆரம்பிக்கப்பட்ட திடீர் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து கட்டுப்பாட்டறை இதனை தெரிவித்துள்ளது.

தொடருந்து திணைக்களத்தில், தொடருந்து பொது முகாமையாளர் ஒருவரை நியமிப்பதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்