முதல் மரண தண்டனை பெற்ற முதற்பெண்: ஏப்ரல் 8- 1899

முதல் மரண தண்டனை பெற்ற முதற்பெண்: ஏப்ரல் 8- 1899

மார்த்தா பிளேஸ் என்ற பெண்மணிக்கு 1899-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி மின்இருக்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. உலகிலேயே முதன்முதலாக ஒரு பெண்ணுக்கு மின் இருக்கையில் தண்டனை பெற்றவர் இவர்தான். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள ராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக தூக்கிலிடப்பட்டான்.

மார்த்தா பிளேஸ் என்ற பெண்மணிக்கு 1899-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி மின்இருக்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. உலகிலேயே முதன்முதலாக ஒரு பெண்ணுக்கு மின் இருக்கையில் தண்டனை பெற்றவர் இவர்தான்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள ராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக தூக்கிலிடப்பட்டான். * 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானாவில் மான்ஸ்ஃபீல்ட் என்ற இடத்தில் கூட்டமைப்பு படைகள் கூட்டுப் படைகளை தோற்கடித்தன. * 1866 - ஆஸ்திரியா- ஹங்கேரிக்கு எதிராக இத்தாலியும் புரூசியாவும் அணி திரண்டன. * 1867 - முதலாவது உலக கண்காட்சி பாரிஸ் நகரில் ஆரம்பமானது. * 1899 - மார்த்தா பிளேஸ் என்பவர் மின் இருக்கையில் மரண தண்டனை பெற்ற முதற்பெண். * 1919 - பஞ்சாபில் நுழையக்கூடாதென்ற தடையை மீறியதால் மகாத்மா காந்தி டெல்லி செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

* 1929 - டெல்லி மத்திய அரசு கட்டிடத்தில் பகத் சிங், மற்றும் பத்துகேஷ்வர் தத் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களையும் குண்டுகளையும் வீசி தாமாகவே சரணடைந்தனர். * 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் பிலிப்பைன்சின் பட்டான் மாநிலத்தைக் கைப்பற்றினர். * 1950 - இந்தியாவும் பாகிஸ்தானும் லியாக்கட்-நேரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். * 1957 - எகிப்தில் சூயஸ் கால்வாய் மீளத்திறக்கப்பட்டது.

* 1973 - சைப்பிரசில் 32 குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன. * 1985 - போபாலில் நச்சு வாயுக் கசிவினால் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்ட நிகழ்வுக்காக இந்தியா யூனியன் கார்பைட் நிறுவனத்துக்கெதிராக வழக்குத் தொடர்ந்தது. * 2000 - அரிசோனாவில் அமெரிக்கக் கடற்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 19 கடற்படையினர் கொல்லப்பட்டனர். * 2004 - சூடான் அரசுக்கும் இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.