பொது மக்களுக்கான ஓர் அறிவிப்பு!
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் வழங்கலில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நீரை வீண் விரயம் செய்யாமல் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்துமாறும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது