புத்தாண்டை முன்னிட்டு விசேட தொடரூந்து சேவை
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மக்களின் பயணங்களை இலவாக்குவதற்கு எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் விசேட தொடரூந்து சேவைகளை ஆரம்பித்துள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை - யாழ்ப்பாணம் விசேட தொடரூந்து சேவை இரவு 9.00 மணிக்கு கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும். இந்த விசேட தொடரூந்து சேவை 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து- கொழும்பு கோட்டை விசேட தொடரூந்து சேவை இரவு 9.50 மணிக்கு யாழ்ப்பாணம் தொடரூந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும். மேற்படி விசேட தொடரூந்து சேவை 12, 15, 17, 19, 21 ஆகிய தினங்களில் இயங்கும்.
யாழ்ப்பாணம் - குருணாகல் விசேட தொடரூந்து சேவை இரவு 12.30 மணிக்கு யாழ்ப்பாணம் தொடரூந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாவதுடன், இந்த விசேட தொடரூந்து சேவை 12 ஆம் திகதி மட்டும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது