ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கையை பரசீலித்த அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கையை பரசீலித்த அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஏப்ரல் -21 தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 15 ஆம் திகதி குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவிருந்த நிலையில், மேலதிக பரிசீலனைக்காக அமைச்சரவை குழு இரண்டு வார கால அவகாசத்தினை பெற்றிருந்தது.

இதற்கமைய குறித்த அறிக்கை இன்று (05) மாலை ஜனாதிபதியிடம் கையளிகப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் ஹரிகுப்த ரோஹணதீர தெரிவித்துள்ளார்