
கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்க மீண்டும் பேச்சுவார்தைகள் - ஜீவன் தொண்டமான்
கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான பேச்சுவார்தைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள சில சரத்துக்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முதலாளிமார் சம்மேளனம் யோசனை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், பெருந்தோட்ட தொழிலாளர்களின் நன்மை கருதி கூட்டு ஒப்பந்தத்தினை புதுப்பிக்க வேண்டிய தேவைப்பாடுகள் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்