சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட தொடருந்து சேவைகள்
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் சௌகரியத்தை கருத்திற் கொண்டு எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் விசேட தொடருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கொழும்பு கோட்டை - பதுளை விசேட தொடருந்து சேவை இரவு 7.30 மணிக்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.
பதுளை - கொழும்பு கோட்டை விசேட தொடருந்து சேவை இரவு 9.00 மணிக்கு பதுளை தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.
மேற்படி விசேட தொடருந்து சேவைகள் 09, 10, 11, 12,17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு கோட்டை - யாழ்ப்பாணம் விசேட தொடருந்து சேவை இரவு 9.00 மணிக்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.
இந்த விசேட தொடருந்து சேவை 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் - கொழும்பு கோட்டை விசேட தொடருந்து சேவை இரவு 9.50 மணிக்கு யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.
அத்துடன் மேற்படி விசேட தொடருந்து சேவை 12, 15, 17, 19, 21 ஆகிய தினங்களில் இயங்கும்.
யாழ்ப்பாணம் - குருணாகல் விசேட தொடருந்து சேவை இரவு 12.30 மணிக்கு யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாவதுடன், இந்த விசேட தொடருந்து சேவை 12 ஆம் திகதி மட்டும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது