இலங்கையில் 132 கர்ப்பிணிகளுக்கு கொரோனா

இலங்கையில் 132 கர்ப்பிணிகளுக்கு கொரோனா

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் தாய் மற்றும் சிசுக்களின் மரண வீதத்தில் எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை என குடும்ப நல சுகாதார பணிமனை அறிவித்துள்ளது.

அந்த பணிமனையின் தாய்மார் மற்றும் குழந்தைகள் சுகாதார பிரிவின் பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனை தெரிவித்தார்.

நாட்டில் இதுவரை 132 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்