இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் நேற்றைய தினம் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்திய சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்தியாவில் நேற்றைய தினம் 89 ஆயிரத்து 129 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமையை அடுத்து தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 23 லட்சத்து 92 ஆயிரத்து 260 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் மேலும் 714 கொவிட் மரணங்கள் பதிவானமையை அடுத்து மரணித்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் முடக்கல் நிலை அமுல்படுத்தப்படவுள்ளது