இந்திய லெஜண்ட்ஸ் அணியின் பத்ரிநாத்துக்கு கொரோனா!

இந்திய லெஜண்ட்ஸ் அணியின் பத்ரிநாத்துக்கு கொரோனா!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த சுப்ரமணியம் பத்ரிநாத் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இலேசான அறிகுறி தென்பட்டதால் மருத்துவ பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், வைத்தியரின் ஆலோசனைப்படி அனைத்துவிதமான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வீட்டில் சுயதனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் பத்ரிநாத் ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த சாலைபாதுகாப்பு உலக தொடரில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜண்ட் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த அணியின் டெண்டுல்கர் மற்றும்  யூசுப் பதான் ஆகியோர் ஏற்கனவே கொரோனா பாதிப்புக்குள்ளான நிலையில், தற்போது அதே அணியில் விளையாடிய பத்ரிநாத்தும் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது