சற்றுமுன் கிடைத்த செய்தி : கொழும்பு நோக்கி சென்ற பேருந்து விபத்து - 7 பேர் பலி - பலர் படுகாயம் (காணொளி)
பதுளை - பசறை 13ஆம் மைல் கல் அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லுனுகல பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து ஒன்றே இன்று காலை 7.15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026