மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் தீப்பரவல்; 20 வீடுகளுக்கு சேதம் (படங்கள்)
மஸ்கெலியா- பிரவுன்ஸ்விக் தோட்டத்தின் ராணி பிரிவில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக நெடுங்குடியிருப்பு ஒன்றின் 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன், அந்த தீப்பரவல் காரணமாக சுமார் 60 பேர் வரை இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



