மனைவின் தங்கை திருமணம் செய்துவையுங்க... அடம்பிடித்த மருமகன்; அதிர்ந்துபோன குடும்பம்

மனைவின் தங்கை திருமணம் செய்துவையுங்க... அடம்பிடித்த மருமகன்; அதிர்ந்துபோன குடும்பம்

தமிழ்நாடு கோவை மாவட்டம், வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி சம்பூர்ணம்.

இவரது, மகள் ராஜேஸ்வரியைக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஊத்துக்குளி மேற்கு பள்ளபாளையத்தை சேர்ந்த பிரபுவுக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

இந்த தம்பதிக்கு ஸ்ரீபரணி என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், திருமணமான சிறிது நாளிலேயே பிரபு தனது மனைவி ராஜேஸ்வரியின் தங்கையையும் தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என கணவர் அடம்பிடித்துள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சிடைந்த பிரபுவின் மாமனார், மாமியார் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இதனையடுத்து, ஆத்திரமடைந்த பிரபு, தனது மனைவி, மற்றும் குழந்தையைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

மகளின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என கலங்கிய குடும்பம் சமாதானம் பேச வைக்க வர சொல்லியுள்ளனர்.

அதன்படி பிரபு துலுக்க முத்தூர் பிரிவுக்கு வந்துள்ளார். அதைத் தொடர்ந்து கருப்புசாமி, அவருடைய மனைவி சம்பூர்ணம் ஆகியோரும், ஸ்ரீ பரணியுடன் ராஜேஸ்வரியும் அங்கு வந்தனர்.

அப்போது அங்கு வந்த பிரபு தனது மாமனார், மாமியாரிடம் உங்களது இளைய மகளை ஏன் எனக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை என மீண்டும் பழைய பல்லவியை ஆரம்பித்து பிரச்சனை செய்தார்.

உன்னிடம் சமாதானம் பேசி எனது மகளை அனுப்பி வைக்கத் தான் வந்தோம் எனப் பிரபுவின் மாமனார் மற்றும் மாமியார் கூறியுள்ளனர்.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபு, அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து, வயதானவர்கள் என்று கூட பார்க்காமல், தனது மாமனார் மற்றும் மாமியாரைத் தாக்கியுள்ளார்.

இதில், அவர்களுக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து, சம்பூர்ணம் கொடுத்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவமானது, அப்பகுதியில் நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.