தட்டசுச்சுப் பொறியின் தந்தை ஆர்.முத்தையா பிறந்த தினம்: பிப்.24 1886

தட்டசுச்சுப் பொறியின் தந்தை ஆர்.முத்தையா பிறந்த தினம்: பிப்.24 1886

தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழில்நுட்பங்களையும் உருவாக்கியவரான ஆர்.முத்தையா 1886-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் பிறந்தார். முத்தையா அவர்கள் தாம் கண்டுபிடித்த தட்டச்சை "ஸ்டாண்டர்ட்" பெரிய தட்டச்சு என்று குறிப்பிட்டார். அது சிறப்பான பல அம்சங்களை உடையது.

 

தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழில்நுட்பங்களையும் உருவாக்கியவரான ஆர்.முத்தையா 1886-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் பிறந்தார். முத்தையா அவர்கள் தாம் கண்டுபிடித்த தட்டச்சை "ஸ்டாண்டர்ட்" பெரிய தட்டச்சு என்று குறிப்பிட்டார். அது சிறப்பான பல அம்சங்களை உடையது.

தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதால் அவை எல்லாவற்றையும் நான்கு வரிசைகளில் உள்ள 46 விசைகளில் அமைக்க முடியாது. எனவே, பல எழுத்துக்களுக்குப் பொதுவான உள்ள சில குறியீடுகளைத் தனித்தனி விசைகளில் அமைத்து அவைகளைத் தேவையான எழுத்துக்களுடன் சேர்த்து அச்சடிக்கக் கூடிய விசைப்பலகையை அமைக்க வேண்டும். அப்படியானால், இரண்டு விசைகளை அழுத்திய பின்பே அச்சை நகரச் செய்ய வேண்டும்.

 


பல பரீட்சைகள் செய்து கடைசியாக நகரா விசையைக் கண்டுபிடித்தார். அதாவது "வி" என்ற எழுத்திலுள்ள விசிறியை அடிக்கும் பொழுது அச்சு நகராது. எஞ்சியுள்ள "வ" வை அடித்த பின் தான் அச்சு நகரும். மெய்யெழுத்துக்களும் இப்படியே அச்சாகின்றன. இவர் உண்டாக்கிய நகரா விசையையே இன்றும் தட்டச்சு உற்பத்தியாளர்கள் உபயோகிக்கிறார்கள்.

இந்த மூன்று நகரா விசைகளும் விசைப்பலகையின் வலப் பக்கம் இருக்கின்றன. முறையான விசைப்பலகைப் பயிற்சி பெற்றவர்கள் இந்த மூன்று விசைகளையும் வலக்கையின் சிறு விரலால் இயக்குவர். முத்தையா அவர்களின் விசைப்பலகை அமைப்பில் க’, த’ போன்ற எழுத்துக்களுக்கு ஒரு விசிறியும், ண’, ன’ போன்ற எழுத்துக்களுக்கு வேறு ஒரு விசிறியும் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும். இவர் தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

மேலும், இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:

• 1875 - ஆஸ்திரேலியக் கிழக்கு கரையில் எஸ்.எஸ்.கோத்தன்பேர்க் என்ற கப்பல் முழ்கியதில் 102 பேர் கொல்லப்பட்டனர்.

• 1881 - சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

• 1918 - எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது.

• 1920 - நாசிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

• 1945 - எகிப்தியப் பிரதமர் அகமது மாஹிர் பாஷா நாடாளுமன்றத்தில் வைத்துக் கொல்லப்பட்டார்.

• 1999 - கிழக்கு சீனாவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 61 பேர் கொல்லப்பட்டனர்.

• 2009 - வாட்ஸ் ஏப் நிறுவனம் ஜான் கௌமால் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.