
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
நாட்டில் நேற்றைய தினம் 722 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில் 713 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 77,906 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 6,321 கொவிட் 19 நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம், நாட்டில் கொவிட்19 தொற்றில் இருந்து நேற்றைய தினம் மேலும் 747 பேர் குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 71, 176 அதிகரித்துள்ளது.