
கொரோனா அச்சம்- கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அரச திணைக்களம்!
கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள நிர்வாக பிரிவில் பத்து பேருக்கு கொவிட்- 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக கிழக்கு மாகாண கல்வி திணைக்கள நிர்வாக பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.டி.ஏ.நிசாம் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி கிழக்கு மாகாண கல்வி திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியதை அடுத்து நடத்தப்பட்ட அன்ரிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் போது பத்து பேருக்கு கொவிட்-19 உறுதிசெய்யப்பட்டது.
அதனையடுத்து தொற்று உறுதியானோர் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏனைய உத்தியோகத்தர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாகாண கல்வி பணிப்பாளர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டி.ஏ.நிசாம் தெரிவித்தார்.